போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-10-09 12:56 GMT

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுப்பிரமணியன்.

போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா புலன் விசாரணை செய்து கடந்த 17.12.2021 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட சுப்ரமணியன் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதையெடுத்து, சுப்பிரமணியன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி ஆகியோருக்கும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் சங்கீதா ஆகியோருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News