திருவாரூர் மாவட்டத்தில் 16ம் தேதி 29 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.