தேனி மஞ்சளாறு அணையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

Update: 2021-05-20 15:17 GMT

தேனி மஞ்சளாறு அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 57 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில்  பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 205 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. மஞ்சளாறு அணையில் முழு கொள்ளளவான 57 அடியில், தற்போது 51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தற்போது 51 அடியை எட்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 53 அடியாக நீர்மட்டம் உயர்ந்தவுடன் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். மேலும் 55 அடியாக  நீர்மட்டம் உயர்ந்தவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் தண்ணீர் திறக்கப்படும்.


மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு  பின்னர் மஞ்சளாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆனது தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சிவஞானபுரம் கிராமங்கள் வழியாக கடந்து செல்லும்.

மஞ்சளாறு அணையின் நிரம்பி நீர் செல்லும் வழித்தடங்களில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை பராமரிக்கும் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News