சிறுமிக்கு ரூ.3 லட்சம்இழப்பீடு வழங்க மகிளா நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லையின் போது தீக்காயம் அடைந்த சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தேனி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது

Update: 2022-07-13 15:15 GMT

தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனுாரை சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு 22 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.  இது வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக  சிறுமியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றார். அப்போது சிறுமியை மக்கள் காப்பாற்றினர். தற்போது சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்றம் சிறுமிக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News