தேனியில் ரேஷன் இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்

Update: 2020-12-26 11:37 GMT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை முனைய இயந்திரத்தினை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை முனைய இயந்திரம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த திட்டமிடலின் தொடர்ச்சியாக உத்தமபாளையத்தில், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, இன்று உத்தமபாளையம் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடத்தில் விற்பனை முனைய இயந்திரம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.வட்ட வழங்கல் அலுவலர் பணியாளர்கள் கொடுத்த இயந்திரத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்ட கோரிக்கையின் மனுவை மற்றும் பெற்றுக் கொண்டார்.

போராட்டத்தில்,மாவட்ட சிறப்பு தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பொன்.அமைதி,மாவட்ட துணைத்தலைவர் மலைச்சாமி,மாவட்ட துணைச் செயலாளர்காமாட்சி முருகேசன், ஆகியோர் தலைமையில், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இயந்திரத்தை திருப்பிக் கொடுக்கும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பைத் தெரிவித்து முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News