உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது

உள்ளாட்சி தேர்தல் வாக்கு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-12 04:39 GMT

தமிழகத்தில் விடுபட்டு போன 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணி 12ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலைமுதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் அவ்வப்போது முன்னிலை நிலவரம் மற்றும் முடிவுகளும் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிய நள்ளிரவு ஆகலாம் என்று தெரிகிறது.

Tags:    

Similar News