திசையன்விளையில் சுடலைமாடசாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-12-18 11:15 GMT

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி இப்பகுதியில் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது.

இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படைப்பு பூஜை நடந்தது. வரிதாரர்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்வலடி ரோடு சாலைக்கரை இசக்கியம்மன் கோவிலிலும் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News