தடுப்பூசி தட்டுப்பாடு- தென்காசியில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

Update: 2021-06-13 07:42 GMT

தடுப்பூசி தட்டுப்பாடு- தென்காசியில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இன்று மாவட்டத்தில் 10 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் முகாம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் காலை 10 மணி முதலே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த டோக்கன் வாங்கி காத்திருந்தனர்.. பிற்பகல் வரை தடுப்பூசிகள் வரவில்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News