கடையநல்லூரில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம்
கடையநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் நடைபெற்றது;
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம்
கடையநல்லூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் மார்ச் 21 தேதி முதல் மார்ச் 26 வரை நடைபெற்றது வருகிறது.
அதன் அடிப்படையில் சுப்பையாபுரம் குழந்தைகள் மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் நடைபெற்றது அதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டம் சார்பாக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் கடையநல்லூர் ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறை மற்றும் தன் சுத்தம் போன்ற கருத்துக்களை குழந்தைகளின் பெற்றோர்களிடம் எடுத்து கூறினார்.