தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பிரிவு உபசார விழா.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

Update: 2021-06-07 08:46 GMT

தென்காசி எஸ்பி சுகுணாசிங்

தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுகுணா சிங் செயல்பட்டு வந்தார். அவர் தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில்  பிரிவு உபசார விழா நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள், ஆகிியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News