குருவிகுளம் சேர்மன் பதவியை பிடிக்க போவது யார்? குழப்பம் நீடிப்பு

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதில் சேர்மன் பதவியை பிடிக்க போவது யார் என குழப்பம் நீடிக்கிறது.

Update: 2021-10-13 13:26 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. இதில் திமுக 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 10 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றிப் பெற்று உள்ளதால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சேர்மன் பதவியை பகிர்ந்து கொள்வார்களா அல்லது திமுக வுடன் இணைந்து சேர்மன் தேர்தலை சந்திப்பார்களா என்கிற குழப்பம் நீடிக்கிறது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சியான அதிமுக இதில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1-வது வார்டில் முத்துசாமி, 6வது வார்டில் மனோகரன், 7வது வார்டில் கனகராஜ், பத்தாவது வார்டில் கணேசன், 15வது வார்டில் செல்வி, 16 வது வார்டில் முத்துலட்சுமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 13 வது வார்டில் முருகேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது வார்டு அருள்குமார், 3வது வார்டில் சங்கீதா, 4 வது வார்டில் சித்ரா, 5 வது வார்டில் கனகேஸ்வரி, 8வது வார்டில் கிருஷ்ணம்மாள், 9வது வார்டில் விஜயலட்சுமி, 11 வது வார்டில் மணிமாலா, 12வது வார்டில் விஜயலட்சுமி, 14 வது வார்டில் வீரலட்சுமி, 17 வது வார்டில் ராமலட்சுமி ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் கண்டு வெற்றி பெற்றுள்ளனர் இதில் யார் சேர்மன் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது

Tags:    

Similar News