ஆலங்குளம் அருகே குடிபோதையில் அண்ணன் அடித்து கொலை: தம்பிகள் வெறிச்செயல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடிபாேதையில் அண்ணனை அடித்துக் காென்ற தம்பிகள். பாேலீசார் விசாரணை.;
தாம்பரம் அருகே கொலை,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி தெற்கு கரும்பனூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வயது 47. கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (42). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை மாரியப்பன் மனைவி சாந்தி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மாரியப்பனின் சித்தி மகன்களான இசக்கிமுத்து, பாஸ்கர் ஆகியோர் மாரியப்பன் வீட்டின் அருகே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த மாரியப்பனுக்கும் தம்பிகள் இசக்கிமுத்து, பாஸ்கர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னி வளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பிகள் கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கொலையுண்ட மாரியப்பனின் தம்பிகள் இசக்கிமுத்து மற்றும் பாஸ்கர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.