சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேர் கைது

தென்காசி மாவட்டம்

Update: 2021-05-13 14:29 GMT

தென்காசி மாவட்டம், மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் புது முயற்சியாக மணல் கடத்தலை முற்றிலும் தடுக்கும் விதமாக தனி குழு ஒன்று அமைத்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கியமாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகிரியில் ட்ரோன் கேமராவின் உதவியோடு மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தது போல், தற்போது கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் ட்ரோன் கேமராவின் உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவரின் மகன் சாமுவேல் (31), மேலமெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மகன் ஆரோக்கியசாமி (38), புளியங்குடி பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் மகேஷ் கண்ணன் (19) மற்றும் செட்டியூரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலமுருகன் (38) ஆகிய 4 நபர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் JCB இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News