கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

Update: 2022-02-25 06:41 GMT

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது 2வது மகன் ராஜ்குமார்(20) ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது கல்லூரி நண்பரான கடையம் நடுத்தெருவை சேர்ந்த தங்கராஜா மகன் ஸ்ரீதரும்(20) நேற்று இரவு பைக்கில் பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். முதலியார்பட்டி சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் மினிபஸ் பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் ராஜ்குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லேசான காயமடைந்த ஸ்ரீதரை அருகில் இருந்தவர்கள் கடையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் பிரகாசை தேடி வருகின்றனர். மினிபஸ் மோதி கல்லூர் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News