கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-10-20 15:00 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சில் பதவிகள் உள்ளன. இதில் திமுக 11 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றியது.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர்

1வது வார்டு மகேஷ் மாயவன், இரண்டாவது வார்டு சங்கர், நாலாவது வார்டு ரம்யா, 5-ஆவது வார்டு தமிழரசி, ஏழாவது வார்டு ஆவுடை கோமதி, எட்டாவது வார்டு பாலக செல்வி, 10-ஆவது வார்டு செல்லம்மாள், 13வது வார்டு ஜெயக்குமார், 14வது வார்டு ஜஹாங்கீர், 15-ஆவது வார்டு புஷ்பராணி, 16வது வார்டு சுந்தரி ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்.

காங்கிரஸ் கவுன்சிலர் இசக்கி குமார், 3வது வார்டு ஜனதா, 6வது வார்டு கணேசன், 9வது வார்டு தங்கம், 17 வது வார்டு இசக்கியம்மாள் ஆகிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News