தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஏன் திறப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்துள்ளதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

Update: 2021-06-14 06:41 GMT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் குறைந்துள்ளது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும். முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொளள் வேண்டும். பொது போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்று பரவலை தவிர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது.

அரசின் விதிகளை பின்பற்றி நடந்துகொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகி உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி இல்லை என்கிற நிலை இப்போது இல்லை.

கொரோனா கட்டளை மையத்தை தொடர்பு கொள்வோரின்  எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News