கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கழனிவாசல் பகுதியில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-04 08:45 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவப்பணிகள் துறை சார்பாக, சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில், மாடுகளுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி,  துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தினர். அதன் பின்பு மாட்டுத்தீவன கண்காட்சியை,  சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Tags:    

Similar News