கொரோனா தொற்று முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும். அமைச்சர் தகவல்

Update: 2021-06-12 12:09 GMT

அமைச்சர் பெரியகருப்பன்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று காலம் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளி வரும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தெரிவித்தார்

சிவகங்கையில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது கொரானா தொற்று காலம் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கூறினார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உச்சநீதிமன்றம் 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது என்று கூறிய அமைச்சர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றதலைப்பில்,பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டதில் சிவகங்கை மாவட்ட மக்களிடத்திலிருந்து 6214 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News