புதுமைப்பெண் திட்டத்திற்கு சேலம் மாவட்ட கல்லூரி மாணவியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைய சேலம் மாவட்ட கல்லூரி மாணவியர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-10-31 14:07 GMT

புதுமைப்பெண் திட்டத்திற்கு கல்லூரி பயிலும் மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டது.

இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது https://pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதள முகவரியில், கல்லூரி மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டதிற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும். மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இந்த புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ஆம் நாள் வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த சிறப்பு முகாமில் கல்லூரி மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது கல்லூரிகளில் 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கும் சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாகத் தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தவைர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News