குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்ட கிளை செயலாளர் எ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகண்ணன், சங்ககிரி நகர செயலாளர் வழக்குரைஞர் ஆர்.ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, சங்ககிரி வட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், குறுக்குப்பாறையூர் கிளைத் தலைவர் கே.பி.ராமசாமி, விவசாயி வளர்மதி, சங்ககிரி நகர காங்கிரஸ் தலைவர் ரவி, மதிமுக நகர செயலாளர் கதிர்வேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், நடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கா.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குப்பைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்பு
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதால் விவசாயமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனால், குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.