மாற்று கட்சியினர்கள் பா.ஜ.,வில் இணைப்பு
சேலம் மேற்கு மாவட்டத்தில்,மாற்று கட்சி புதிய உறுப்பினர்கள் பா.ஜ.,வில் இணைப்பு;
மாற்று கட்சியினரின் பாஜகவில் இணைப்பு: மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நடந்த விழா
ஓமலூர், காமலாபுரம், நங்கவள்ளி மற்றும் வனவாசி பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 பேர் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் வனவாசியில் நடைபெற்ற இந்த விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட தலைவர் கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்குதல், வரும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சண்முகம் மற்றும் கிருஷ்ணதேவராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.