சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது முறைகேடு புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.;
சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
பல்கலைக்கழக விதிகளை மீறி அமைப்பு தொடங்கிய புகார்
பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளதாக கூறி, சேலம் பெரியார் துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக, பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக புகார்
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை, சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் தாக்கல் செய்த மனு
இதனைத்தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு. வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்கிய உத்தரவு
இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன். வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். துணைவேந்தர் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
15 நாட்களாக விசாரணை நடத்திய போலீஸ்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
விரைவில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது தொடரப்பட்ட வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.