சேலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது சேலத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்வு;

Update: 2025-03-22 09:10 GMT

சேலம் மாநகராட்சிக்கு தினமும் 150 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்படுகிறது

சேலம் மாநகராட்சியில் ஒரு லட்சம் வீட்டு குடிநீர் இணைப்புகள் மற்றும் 5,000 வணிக இணைப்புகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில வாரங்களாக குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆணையர் இளங்கோவன் தொட்டில்பட்டி மற்றும் நீரேற்று நிலையங்களை ஆய்வு செய்து பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, முன்பு மூன்று மோட்டார்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஐந்து மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் முன்பு 115 முதல் 130 எம்.எல்.டி வரை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது அதிகபட்சமாக 150 எம்.எல்.டி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு அழகாபுரத்தில் உள்ள தனிக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக சரிசெய்து கான்கிரீட் கொட்டி மூடினர். மாநகராட்சி அலுவலர்களின் கூற்றுப்படி, பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதால் நீரின் அழுத்தமும் அளவும் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடைகாலம் என்பதால் தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குடிநீரின் அழுத்தமும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News