கண்டைனர் லாரி கட்டுப்பாட்டை இழந்தது - எட்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை உதிரிபாக ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் பழுதாகி நின்றது. எட்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே சென்னை அடுத்த செங்கல்பட்டு சிப்காட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தொழில் நிறுவனத்திற்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி சென்ற கண்டைனர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் எட்டு மணிநேரத்திற்கும் மேலாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை (NH-4) நான்கு வழிச்சாலையாக முதன்முதலில் போடப்பட்டது. மேலும் ஆறு வழிச்சாலையாக பெங்களூரில் இருந்து வாலாஜாபேட்டை சுங்க சாவடி வரை ஆறு வழிச்சாலையாக போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் ஒரு வழி பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக சாலை ஓரங்களில் ஈரமாக இருந்ததால் கண்டைனர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.கிரேன் உதவியுடன் அந்த வாகனத்தை இழுக்கும் போது சாலையின் குறுக்கே நின்று விட்டது இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. எனவே மாற்று பாதையில் சென்ற வாகனமும் சேற்றில் சிக்கிக்கொண்டது இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குல்லாகினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏர்ப்பட்டுல்லது.போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவேரிப்பாக்கம் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.