ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மற்றாெருவர் மருத்துவமனையில் அனுமதி.

Update: 2021-11-01 12:29 GMT

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக்மோதி தொழிலாளி பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே காவனூர், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(29 ) தொழிலாளி. இவர், அதேபகுதியைச் சேர்ந்த விஜி என்பவருடன் சேர்ந்து பைக்கில் திமிரிக்கு பைக்கில் சென்றனர்.

.அப்போது, வழியில் திடிரென பைக் கட்டுபாட்டை இழந்து டிரான்ஸ்பாரமர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில், ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானர். அருகிலிருந்தவர்கள் உடனே விஜியை ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த திமிரி போலீஸாசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News