ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்

ஆற்காடு வட்டாட்சியர்அலுவலகத்தில் ஜமாபந்தியில் 103பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-07-08 14:26 GMT

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில்1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி தொடங்கி 6 நாட்களாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி நிறைவு பெற்றவுடன் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி வரவேற்றார் .

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ,103 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 67ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாலாஜி, துணை வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News