ஆற்காடு அருகே பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

ஆற்காடு அருகே வெவ்வேறு பகுதியில் பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

Update: 2021-06-10 15:18 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு  அருகே மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் முகத்தை கைகளால் மூடி தனது வீட்டின் அருகே இருந்த முட்புதரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமியைக்  காண வில்லை என்று பெற்றோர்  தேடினர்  அதையறிந்த முருகன் சிறுமியை  அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டான்.

இந்நிலையில் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது  முருகன் சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு  கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெரியவந்த்து உடனே  சிறுமியின் தாயார்  ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார் அப் புகாரின் பேரில் விசாரித்த  மகளிர்  போலீஸார் முருகனை  கைது செய்து சட்டத்தின் கீழ் போக்சோ சிறையிலடைத்தனர்.

அதேபோல் மற்றொரு புகாராக  ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமி ஒருவரை கற்பழித்து  3 மாதம் கர்ப்பமாக்கியதாக  தமிழரசன் என்பவர் மீது அளித்த புகாரினை  விசாரித்த போலீஸார், தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News