ரத்தினகிரி முருகன் கோயிலில் தெலுங்கான கவர்னர் சாமி தரிசனம்
தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்;
ரத்னகிரி முருகன் கோவிலில் தமிழிசை சௌந்தரராஜன்
தெலூங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் வேலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சிகளுக்கு பின்பு அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
அப்போது இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் நினைவுப்பரிசாக புத்தகம் ஒன்றை வழங்கி வரவேற்றார். அப்போது , கோயில் நிர்வாகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்..