மாம்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

Update: 2022-03-16 16:11 GMT

ஆற்காடு மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்ததாவது: வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

Tags:    

Similar News