ஆற்காடு ஒன்றியம் 6வது வார்டில் நான்குமுனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது

Update: 2021-10-01 13:21 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ரோஸ், திமுக சார்பில் வெள்ளையம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் சார்பில் ராஜகுமாரி மற்றும் பாமக சார்பில் சுசிலா ஆகியோரும் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவிற்கு சில நாட்களே உள்ளதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News