திமிரியருகே மின்சாரம் தாக்கி விவசாயி, கன்றுகுட்டி உயிரிழப்பு

திமிரியருகே நம்பரையில் கொட்டகையில் மாடுகளைக் கட்டச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கன்று குட்டியும் இறந்தது

Update: 2021-11-20 05:38 GMT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரியடுத்த நம்பரைகிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(40)விவசாயி, இவருக்கு,மனைவி, மகன்கள் உள்ளனர். சங்கர் அவரது நிலத்தில் கொட்டகை அமைத்து 4 பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் கனமழைப் பெய்ததில் தண்ணீர் பெருக்கெடுத்து காணப்பட்டுள்ளது.ஓடியது. எனவே ,சங்கர் நிலத்தில் உள்ள மாடுகளை மாற்று இடத்தில் கட்டிவிட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றார்.

ஆனால். இரவு நீண்ட நேரமாகியும் அவர்  வீடுதிரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரைத்தேடி அங்குச் சென்று பார்த்தனர்.  அப்போது, சங்கர் மின்சாரம் தாக்கி  இறந்து கிடந்தார் அருகில் கன்றுகுட்டியும்  மின்னல் தாக்கி இறந்து கிடந்தது.

அதனைககண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்   திமிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலின் பேரில் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு ஆற்காடு மருத்துவமனைக்கு வைத்தனர்.

மேலும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News