ஆற்காடு ஒன்றியம் 7வது வார்டில் மும்முனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது

Update: 2021-10-01 13:27 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பவ்யா, திமுக சார்பில் ஸ்ரீமதி நந்தகுமார், பாமக சார்பில் மஞ்சுளா ஆகியோர் மோதுகின்றனர்.

மும்முனைப்போட்டி என்பதால், போட்டி மிக கடுமையாக உள்ளது. வேட்பாளர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News