சிறுபான்மையினர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு
சிறுபான்மையினர் கடன் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது;
தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் முஸ்லிம், கிறிஸ்தவர், பெர்சியர், புத்திஸ்ட், ஜைனர் மற்றும் சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு தனிநபர் சுயஉதவிக்குழு, கைவினைஞர், சிறுதொழில், மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு இரு கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திட்டம் 1ல் கடன் வேண்டுபவர்களின் ஆண்டு வருமானம் நகர்புறத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம், கிராமபுறத்தில் உள்ளவர்களுக்கு 98 ஆயிரம், திட்டம் 2ல் கடன் பெற 8 லட்சம் ஆகியவற்றிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
திட்டம் 1ல் தனிநபர்கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டியில் அதிகபட்சக் கடனாக 20 லட்சம் வழங்கப்படுகிறது.
அதேபோல் திட்டம் 2ல் தனிநபர் கடன் ஆண்டுக்கு ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டியில் 30 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் கைவினைஞர்கள் கடன் தொகை 10 லட்சம் வழங்கப்படுகிறது அவற்றிற்கு ஆண்டு வட்டியாக ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4 % என வசூலிக்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தில் அதிகபட்ச தனிநபர் கடன் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகைக்கு பெண்களிடம் 6% ஆண்களிடம் 8% ஆகிய விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது
அதேபோல திட்டம் 1ல் இருப்பவர்களுக்கு 3% வட்டியில் 20 லட்சமும், திட்டம் 2ன் கீழ் உள்ளவர்களுக்கு 30 லட்சம் கடன் அளிக்கப்பட்டு வட்டியாக பெண்களுக்கு 5%, ஆண்களுக்கு 8% என்ற வீதத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடன் பெற விரும்புவோர் ஆதார், இருப்பிடம், மற்றும் வருமானச்சான்று, குடும்பஅட்டை,, தொழில்விபரம், திட்ட அறிக்கை, மதச்சான்று, வாகன கடன் பெறுவோர் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல், கல்விக்கடனுக்கு மாற்றுச் சான்றிதழ் உண்மைச்சான்று (போனபைட்) கட்டணம் விபரம் மற்றம் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்து பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்குமாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.