உள்ளாட்சித்தேர்தல்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4467 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தளுக்கு இதுவரை 4467 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்

Update: 2021-09-21 14:51 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று 868 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 12 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 76 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 100 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 680 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்டத்தில் 4467 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 24 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 226 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 785 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3432 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News