தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை கொலை செய்த மகன்

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-09 17:09 GMT

பைல் படம்

தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு பாகம்பிரியாள் (38). என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மகாலிங்கம் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பாகம்பிரியாளுக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். பாகம்பிரியாள் தந்தையுடன் பழகுவதை அறிந்த சேகரின் மகன் சுப்பிரமணி தரப்பினர் பாகம்பிரியாளை பலமுறை கண்டித்துள்ளனர். தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று மருதுபாண்டியர் நகரில் இருந்த பாகம்பிரியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் பாகம்பிரியாள் உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து சுப்பிரமணியை கைது செய்து பரமக்குடி டவுண் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News