பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

பாத்திமா கல்வி அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்.

Update: 2022-05-16 17:16 GMT

பாத்திமா கல்வி அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்.

இராமநாதபுரம் பாத்திமா கல்வி அறக்கட்டளை மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் நரிக்குறவர் மக்களுக்கு பல்வேறு கல்வி உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள நரிக்குறவர் மக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் பாத்திமா கல்வி அறக்கட்டளை இணைந்து நரிக்குறவ மக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளது. இதன் துவக்கவிழா இன்று பாத்திமா கல்வி அறக்கட்டளை அலுவலகத்தில் தாளாளர் முகமது சலாவுதீன் தலைமையில், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி கழக உதவி இயக்குனர் யோகம் முன்னிலையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நரிக்குறவர் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்களை வழங்கி, பயிற்சி குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஹெல்த் ஹேர், உணவு மேலாண்மை, சமையல் உதவியாளர், ஏ.சி மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நரிக்குறவ இன மாணவர்களுக்கு 6 மாதம், 3 மாதம் பகுதி/முழு நேர குறுகிய கால பயிற்சிகளாக வழங்கப்பட உள்ளது. பயிற்சிகள் முடிந்தவுடன் கல்வி உதவித் தொகை மற்றும் அரசு சான்றுகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற இலவச பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வில் பயிற்சி அலுவலர் ஜெயபால், மகாத்மா காந்தி நேசன், பெல்லோ, பிரியதர்சன் உள்ளிட்ட நரிக்குறவர் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News