புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.