பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு

பெரம்பலூரில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் காதை அறுத்து மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

Update: 2021-12-06 16:56 GMT

பெரம்பலூர் மாவட்டம் , ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி ஜெகதாம்பாள் ( 52 ) . இவர் , இன்று மாலை 5 மணியளவில் ஆதனூர் - சீராநத்தம் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் .

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த , அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் , ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த 1/4 பவுன் தோடு ஆகியவற்றை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் . இது குறித்து ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் , மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . காது மற்றும் கழுத்தில் காயமடைந்த அந்தப் பெண் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

Tags:    

Similar News