குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.;
மனைவி முத்து லட்சுமி மற்றும் குழந்தையுடன் ஆறுமுகம் (பழைய படம்)
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் .கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது45) இவர்களுக்கு 3 பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது, இந்நிலையில் வீட்டில் முத்து லெட்சுமி சமையலுக்காக இறைச்சியை வெட்டி கொண்டிருக்கும் போது கணவர் ஆறுமுகம் மற்றும் முத்துலெட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மனைவி இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலெட்சுமி துடி துடித்து உயிரிழந்தார். இதனையடுத்து ஆறுமுகம் மனைவியின் கழுத்தை வெட்டியதாக அருகே இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்,அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மங்கலமேடு காவல் துறைக்கு, அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து இறந்த முத்துலட்சுமி உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலை நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பிள்ளைகள் இருக்கும் நிலையில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வவருகின்றனர்.