பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2021-12-17 15:38 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 190 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 15ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (18.12.2021) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 22 அங்கன்வாடி மையங்கள், 46 பள்ளிகள், 32 துணை சுகாதார நிலையங்கள், 28 கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட 29 இடங்களில் சிறப்பு முகாம்கள் என  மாவட்டத்தில் இதற்கென பெரம்பலூர் வட்டாரத்தில் 45 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 46 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News