உதயநிதி பிறந்த நாள் விழா: தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

பெரம்பலூரில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-11-26 07:13 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் அரனாரை கிராமத்தில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாளை முன்னிட்டு, துரை.காமராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்-கழக துணைப்பொதுச்செலாளர் ஆ.இராசா. எம். பி.,கலந்து கொண்டு ரூ.50 ஆயிரம் மதிப்பில், 30 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி,மளிகைபொருட்கள்,வேட்டி,சேலை மற்றும் நலிந்தோருக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர்,மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன்,ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம்,நகர பொருளாளர் பெ.முத்துக்குமார், அரனாரை ஜெய்க்குமார் உள்ளிட்ட ஏராளமானோர கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News