மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு

திருப்பத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2021-10-22 12:36 GMT

மாநில போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான கிரிக்கெட் போட்டி பெரம்பலூரில் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் பன்னிரண்டாவது ஸ்டேட் சாம்பியன் ,ராஜா ராணி டிராபி ,19 வயது உடைய இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது . இதில் திருச்சி அரியலூர், பெரம்பலூர் ,வேலூர் ,கடலூர், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம் வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற இன்று பெரம்பலூர் மிராக்கல் கிரிக்கெட் அகாடமி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் வீரர்களுக்கான  தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்றனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் நாளை நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார்கள். இப்போட்டியில் திறமையாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் பங்கு பெற அதிக வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News