பெரம்பலூரில் புதிய மின்மாற்றிகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. தொடங்கினார்
பெரம்பலூரில் புதிய மின் மாற்றிகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.;
பெரம்பலூரில் புதிய மின்மாற்றிகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும் சீரான தடையில்லாத மின்சாரம் வசதி வழங்கிடவும் மின் வசதி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிடவும் குறைந்த மின் அழுத்தம் குறைபாடு மற்றும் அதிகம் மென்பொருள் குறைபாடுகள் உள்ள பகுதிகளில் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் 164 மின்மாற்றிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரம் உப கூட்டத்திற்கு உட்பட வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி பாளையம் ,ரெங்கநாதபுரம் ,துறையூர் ரோடு ,கேப்டன் நகர் ,டார்வின் சிட்டி, துறைமங்கலம் ,ராஜா நகர் ,சித்தர் கோவில் சுற்றியுள்ள குடியிருப்புகள் கோல்டன் சிட்டி குடியிருப்புகள் அருகில் ரோடு மின் நகர் ,செல்வா நகர் ,திருச்சி ரோடு மதுரகாளியம்மன் நகரை எறையசமுத்திரம் கிராமம் உள்ளிட்ட 14 இடங்களில் புதிய மின்மாற்றிகள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் விஜய், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் ,உதவி மின்பொறியாளர் கருணாநிதி, அழகர், சரவணன் மற்றும் மின்வாரிய களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.