பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-11-15 19:03 GMT

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட , எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ . 16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் , சொக்கநாதபுரம் , ஆலாம்பாடி , எசனை , செஞ்சேரி , கீழக்கரை , பாப்பாங்கரை , இரட்டைமலை சந்து , அனுக்கூர் , சோமண்டப்புதூர் , வேப்பந்தட்டை , பாலையூர் , மேட்டாங்காடு , திருப்பெயர் , கே.புதூர் , மேலப்புலியூர் , நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News