பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறப்பு: போலீசார் தீவிர விசாரணை

பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2022-02-25 13:00 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (48 ). இவர் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தனது மோட்டார் சைக்கிளுடன் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள பெரியம்மாபாளையம் பிரிவு சாலையில் மர்மான முறையில் , வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து வழிப்போக்கர்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார் ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது வழக்குப்பதிவு மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், வி.ஏ.ஓ வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட நகைகள் பொருட்கள் அப்படியே இருந்துள்ளது. வி.ஏ.ஓ. மர்மாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News