உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

உலக மகளிர் தினத்தை அதிகாரிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா.

Update: 2022-03-08 16:16 GMT

பெண் அதிகாரிகளுடன் மகளிர் தினவிழாவை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் உலக  மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியினை தெரிவித்தார் கலெக்டர்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  அங்கையர்கண்ணி உதவி ஆணையர் சேபானா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News