பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-23 10:23 GMT

பெரம்பலூர் அருகே உள்ள  எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 45 . இவருக்கு ரூபா தேவி என்ற மனைவியும் , ஹரி விக்னேஷ் என்ற மகனும் ,நந்தினி என்ற மகளும் உள்ளனர் . ஆறுமுகமும் , ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் , நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவரும் வழக்கம்போல்  காலை வேலைக்கு சென்று விட்டனர் .

ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும் , நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர் . ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது , வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் . இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார் .

அதன்பேரில் , ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்த போது , வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததும் , மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை , ரூ .7,500 பணம் ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது . இது குறித்துபெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர் . மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News