பெரம்பலூரில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-10 04:51 GMT

பெரம்பலூரில் பட்ஜெட் விளக்க தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

தமிழக அரசின் 2022 பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சியில் பெருவெற்றியை தந்த பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேரடித்திடலில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் - மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்தின் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் - நகர கழகச் செயலாளர் எம்.பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார்.

இதில் மாநில சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன்,என்.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன்,எஸ்.சிவக்குமார்,மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி(ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர்),எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன்,பேரூர் கழக செயலாளர்கள்மு. வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன்,பி.சேகர், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்தமிழ்சல்விமதியழகன்,பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகாராஜேந்திரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் -நகராட்சி துணைத்தலைவர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணிதுணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன்,எ.ரசூல்அகமது, தங்க.கமல்,டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் டாக்டர் அ.கருணாநிதி, மகாதேவிஜெயபால்,பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனாஅண்ணாதுரை,வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம்,வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாசெல்லப்பிள்ளை, ஒன்றிய துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதாரமேஷ், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், பேரூராட்சி துணைத்தலைவர்கள் கீதாதுரைராஜ், சரண்யாகுமரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் எம்.மணிவாசகம், ஜி.கே.மூர்த்தி,

நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் என்.ராகவன்,

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜேஷ், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், ரா.சிவா,கணேசன், கழக முன்னோடிகள் இ.பி.கணேசன்,எசனை ஆதித்யன், நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் கழக பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News