சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Update: 2021-02-28 10:00 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பூரில் இருந்து கொளப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மீது கொளப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரில் சம்பவ இடத்திலேயே 2 பெண் குழந்தைகள் மற்றும் குழந்தையின் தாயும் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் குழந்தையின் 5 வயது சகோதரன் குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகிய 3 பேரும் கடுமையான காயங்களுடன் மயக்கமடைந்தனர்.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து குறித்து காவலர்களுக்கும் அவசர ஊர்தி 108கும் தகவல் கொடுத்ததை தொடர்ந்து விபத்தில் இறந்தவர்கள் மற்றும் கடுமையாக காயம் அடைந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பாட்டியும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மாயமானதால் காரின் எண் மற்றும் விவரங்களை சேகரித்து வரும் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விபத்து செய்தவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News