பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-12-06 17:41 GMT

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் கொரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறவில்லை. இந் நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக அன்னமங்கலம் கிராமத்தில் 13.01.2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தகுந்த பாதுகாப்புடன் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்குமாறு அன்னமங்கலம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News